திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து இன்று காலை வழக்கம் போல் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும் போது கவிழ்ந்தது. பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது காரணமாக, வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர். சம்பவத்தை சுற்றியிருந்த பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் இருந்த மாணவ மாணவிகளை மீட்டு காப்பாற்றினர். இதில் மூன்று மாணவ மாணவிகள் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
இந்த விபத்துக்கான விசாரணையை திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் காரணமாக மாணவ மாணவிகள் பாதுகாப்பு மற்றும் பள்ளி போக்குவரத்து நடைமுறைகள் மீதான கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது.















