பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் இன்று வழக்கம் போல் மாணவ,மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகளிடம் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிற்க வைத்து மாணவிகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவிகள் பள்ளியின் வெளியே சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இது அறிந்த அக்கம்பக்கத்தினர் மயக்க நிலையில் இருந்த மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலிரவு சிகிச்சை அளித்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் அங்கிருந்த ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாணி பவுடர் குடித்த மாணவியின் பெற்றோர் கூறுகையில் மாணவிகள் என்ன தவறு செய்திருந்தாலும் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் தெரிவித்திருக்க வேண்டும் ஆனால் இது சம்பந்தமாக எங்களிடம் எந்த தகவலும் சொல்லவில்லை, ஆனால் மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாக மட்டுமே கூறியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தான் மாணவிகளுக்கு அறிவுரை தான் வழங்கியதாகவும் ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதற்காக மாணவிகள் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றனர் என்பது முழுமையான விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும்
