அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 206வது தேவாரத்தலமாக இது விளங்குகிறது.
சுpவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளமாக பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருககையில், இத்தலம் அமைந்த பகுதியில் அருகே வரும்போது இருள்சூழ்ந்ததால் அருகில் உளள கூப்பிடுவிநாயகர் கோயிலில் ஓய்வெடுத்தார்.
அப்போது தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன். தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப்பொருட்களை கவரச் செய்தார். இதனால் மனக்கலக்கமற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தநத பொருட்களை மீட்க வழி கூறும்படி முறையிட்டார்.

தனது தந்தையின் திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கி திசை நோக்கி காட்டியனார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு அவரை உரிமையுடன் திட்டிப்பாடி இழந்த பொருடள் மீட்டுத்தரும்படி வேண்டினர்.
அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும் பொருளையும் அவருக்கே திரும்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது.
இத்திருதலத்தின் முதன்மையானவரான சிவன் முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால் திருமுருகநாதர் என்று திருப்பெயரில் அழைக்கப்படுகிறார். அவர் வணங்கியதை விளக்கும் முகமாக இத்திருத்தில் தெற்கு நோக்கியப்படி உள்ள முருகன் சன்னதியின் கருவறைக்கு உள்பகுதியில் தென்புறம் மேற்கு நோக்கியப்படி லிங்கம் உன்று உள்ளது.

முருகன் இங்கு வந்து சநவநைன வழிபடும் முன்பு தனுது வேல்-யை கோயிலுக்கு வெளியே சென்று சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகிறல் நிறுத்தினார். இதனால் கோயிலுக்குள் இருக்கும் முருகனின் கையில் வேல் இருக்காது. மயில் வாகனமும் இருக்காது.
இத்திருக்கோயிலில் சிவன் பிரம்மதாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. கோயிலின் மையத்திpல் சண்முகதீர்த்தம், இடப்புறம் ஞானதீர்த்தம் வலப்புறம் பிரம்ம தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்கள் உள்ளன.
முற்காலத்தில் புத்திரப்பேறின்றி மதவித்த மகாரதன் எனும் பாண்டிய மன்னன் சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக்கொண்டு பாயசம் செய்து பசும்பால் கற்கண்டுசேர்த்து சுவாமிக்கு நைய்வேத்யம் படைத்து அந்தணர்களுக்கு தானம் செய்தான்.

ஆதன்பயனாக அவனுக்கு இரட்டை குழந்தைகளை பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தின் தென்கிழக்கில் வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் இறைவனின் துணைவியார் நீலகண்டி என்ற திருநாமத்துடன் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.
ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன் ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்டுத்தி துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திடமுருகன் சம்ஹாரத்திற்கு தயாரானார்.
ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தநத வேற்கொண்டு படையால் இரண்டாக வெட்டி பின்னர் மயிலாகவும் சேவலாகவும் மாற்றி ஆட் கொண்டார். ஏப்படியிருப்பினும் சூரனை துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க கயிலைமலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி மாதவிநாதரை வணங்க வந்தார்.

அப்போது பூiஐக்கு தீர்த்தம் தேவைப்பட அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்த நீரை எடுத்து சிவனை மேற்கு நோக்கியப்படி அமைத்து பிரதிஷ்டை செய்து வணங்கினார். பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார்.
அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகன் சன்னதியின் சதுரக்கல்லாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இத்தலத்தில் பக்தர்கள் வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிய சுவாமிக்கு பால்குடம் காவடி எடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சுவாமியை மனமுருகி வேண்டிக்கொள்ள மனநோய், சாபங்கள், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தீர்த்தகரையில் நாகபிரதிஷ்டை செய்து வணங்குகின்றனர். சண்டுக தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.