ஈரானுக்கு குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கும் உலகம் – உமர் அப்துல்லா கண்டனம்

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசியக் காங்கிரசின் முக்கிய தலைவருமான உமர் அப்துல்லா, “ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான எந்த நேர்மையான காரணமும் இல்லை. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சத்தமின்றி இருவது ஏன் ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஈரானுக்கு ஆதரவாக பல அமைப்புகள் தெருவில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. ஈரானைச் சேர்ந்தவர்கள் மற்றும் அங்கு பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, “இஸ்ரேலின் தாக்குதல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது நேர்மையற்ற செயல். உலக நாடுகள், குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் கூட இந்த தாக்குதலைக் குறித்து அமைதியாக இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது” எனத் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இந்த வகை தாக்குதல்களில் இரட்டை நிலைப்பாட்டை உலக நாடுகள் எடுத்துக்கொள்வது எதிர்காலத்தில் சுமூகமான உறவுகளை பாதிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

Exit mobile version