March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடல் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

by sowmiarajan
January 3, 2026
in News
A A
0
மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடல் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் வனபத்ரகாளியம்மன் சாலையில் அமைந்துள்ள காட்டூர் ரயில்வே கேட், நேற்று நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான உலகப் புகழ்பெற்ற மலை ரயில் பாதை இந்த நகரின் மையப்பகுதி வழியாகச் செல்கிறது. தினசரி காலை 7:10 மணிக்கு மலை ரயில் செல்லும் போது இந்த கேட் அடைக்கப்பட்டு, ரயில் கடந்த பின் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று, ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தொழில்நுட்பக் காரணங்களால் கேட் நீண்ட நேரம் அடைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால், கல்லாறில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி என்ஜின் மட்டும் வந்து கொண்டிருந்தது. குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேடான பகுதியில் ரயில் வரும்போது, காலை நேரத்தில் பெய்த தூறல் மழையினால் தண்டவாளத்தில் வழுக்கும் தன்மை ஏற்பட்டது. இதனால் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்திலேயே சுழன்றபடி முன்னேறிச் செல்ல முடியாமல் நின்றது. இதன் காரணமாக, காட்டூர் ரயில்வே கேட் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில், பொறுமையிழந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், “ரயில் நிலையத்திலிருந்து சிக்னல் கிடைத்தவுடன் உடனடியாக கேட்டை மூடாமல், ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மட்டும் கேட்டை மூட வேண்டும்” எனத் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், “கல்லாறிலிருந்து ரயில் வர 20 நிமிடங்கள் ஆகும். நேற்று மழையினால் தண்டவாளம் வழுக்கியதால் ரயில் நின்றது. தண்டவாளத்தில் மணல் தூவி, ரயிலை இயக்கி ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த பின்னரே கேட்டைத் திறக்க முடிந்தது. ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளின் படியே கேட்டுகள் இயக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தனர்.

தற்போது அந்தப் பகுதியில் நிலைமை சீராகிப் போக்குவரத்து பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. எனினும், அடிக்கடி நிகழும் இது போன்ற காலதாமதங்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

Tags: blockadegate roadkattoorMettupalayamRailway
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உடுமலையில் சங்கமித்த கோவை மருத்துவக் கல்லூரியின் முதல் பேட்ச் மாணவர்கள்

Next Post

வால்பாறை குரங்குமுடி எஸ்டேட்டில் 2 மாதங்களாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை காட்டு யானையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
வால்பாறை குரங்குமுடி எஸ்டேட்டில் 2 மாதங்களாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை காட்டு யானையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

வால்பாறை குரங்குமுடி எஸ்டேட்டில் 2 மாதங்களாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை காட்டு யானையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.