காஸா :
உலகம் முழுவதும் போர் மற்றும் அரசியல் ஆதிக்கத் தோற்றங்கள் காரணமாக குழந்தைகள் நாள்தோறும் உயிரிழந்து வரும் துயரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. “போரின் முடிவை குழந்தைகள் தான் அனுபவிக்கிறார்கள்” எனும் உண்மையை ஒவ்வொரு நாளும் உலகம் காண்கின்றது.
காஸாவில் தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில், சுகாதாரம், தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிருடன் போராடி வருகின்றனர்.
“தயாரிக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் பசியால் வாடும் மக்களிடமிருந்து திருடப்படுகிறதுதான்,”
– ஐசனாவர், முன்னாள் அமெரிக்க அதிபர்.
UNICEF எச்சரிக்கை :

ஐநா குழந்தைகள் நிதியம் (UNICEF) வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டும் மே மாதத்தில் காஸாவில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 5119 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரலை விட 50%, பிப்ரவரியை விட 150% அதிகரிப்பு.
உணவின்றி மண்ணை கடித்து உணவாக நினைத்த சிறுவன் :
சமீபத்தில், காசாவில் ஒரு சிறுவன் உணவின்றி மண்ணை வாயில் போட்டுக்கொண்டு அழும் வீடியோ உலகெங்கும் பரவியது. இது உணவுக்காக வாடும் குழந்தைகளின் வலியை நேரடியாக காட்டுகிறது.
“11 மாதங்களில் 14,000 குழந்தைகள் மரணம்” – ஐநா எச்சரிக்கை
உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்படாவிட்டால், காஸாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என ஐநா மனிதாபிமானப் பிரிவு தலைவர் டாம் பிளெட்சர் எச்சரித்துள்ளார்.
“இது இனப்படுகொலைக்கு இணையானது”
ஐக்கிய இராச்சிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 65% பேர் இஸ்ரேலிய பிரதமரை கைது செய்ய வேண்டுமெனவும், 30% பேர் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய நிலை :
2023-ல் மட்டும் காஸாவில் 7,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
சிரியா உள்நாட்டு போரில் 30,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
யேமனில் 12,000 குழந்தைகள் மற்றும்
இடம்பெயர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியுள்ளது.