ஒட்டங்காடு கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் திருவிழா

தரங்கம்பாடி அருகே ஒட்டங்காடு கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில், தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன். ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு பக்தி பரவசத்துடன் தீமிதித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி தீமிதி திருவிழா தொடங்கியது அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் தீர்த்த குளத்திலிருந்து சிறப்பு பூஜைகளுடன் கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள், சிவப்பு உடை உடுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு பக்தி பரவசத்துடன் தீமிதித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Exit mobile version