சென்னை, ஜூன் 15, 2025 உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக தந்தையர் தினம் இன்று, ஜூன் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்தையின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் நாளாகும்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் நினைவுகூர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாள், தந்தைகளின் பங்களிப்பை நினைவுகூரும் முக்கியமான நாள் என அனைவராலும் கொண்டாடப்படுகிறது.