March 26, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்திய நிதியை முடக்கி நெல்லை வீணடிக்கும் தி.மு.க., அரசு: அதிரடிப் புகார்!

by sowmiarajan
December 21, 2025
in News
A A
0
மத்திய நிதியை முடக்கி நெல்லை வீணடிக்கும் தி.மு.க., அரசு: அதிரடிப் புகார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்களில் நிலவும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தமிழக பா.ஜ., விவசாய அணியினர் டில்லியில் நேரில் சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் அமைச்சரைச் சந்தித்த குழுவினர், தமிழகத்தில் நெல் பாதுகாப்பு மற்றும் உழவு இயந்திரப் பயன்பாட்டில் ஆளுங்கட்சியினர் மேற்கொண்டு வரும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளை விரிவாகப் பட்டியலிட்டனர்.

இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.நாகராஜ், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 லட்சம் டன் நெல் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் வீணாகியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். நெல்லைப் பாதுகாப்பதற்கான நவீனக் கிடங்குகளைக் கட்டுவதற்கு மத்திய அரசு போதுமான நிதியுதவி வழங்கியும், தமிழக அரசு அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றார். “மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே போனது? கிடங்குகள் ஏன் கட்டப்படவில்லை? என்பது குறித்து மத்திய அதிகாரிகளை அனுப்பி நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்காக மத்திய அரசு வழங்கும் மானிய நிதியில் வாங்கப்பட்ட இயந்திரங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தி.மு.க.,வினருக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு விடப்படுவதாகவும், இதனால் சாமானிய விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

மத்திய அரசின் ‘ஆத்மா’ (ATMA) வேளாண் தொழில்நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் வேளாண் பட்டதாரிகளின் ஊதிய விவகாரத்திலும் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக நாகராஜ் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு மாதம் 45,000 ரூபாய் ஊதியம் நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு அவர்களுக்கு வெறும் 15,000 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகக் கூறினார். மீதமுள்ள நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்தப் பணியாளர்கள் வேளாண் பணிகளுக்குப் பதிலாக, முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு விவசாயிகளைக் திரட்டி வரும் பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்ற பா.ஜ.,வின் கோரிக்கையை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags: agricultural concerncentral fundsdmk governmentpolitical accusation paddy wastage
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீதிமன்றத்தை அச்சுறுத்தும் தி.மு.க., அரசு: 15 அடியில் சர்வே கல்லா? ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

Next Post

முதல்வர் வருகைக்கு கறுப்புக்கொடி காட்டத் திட்டம் முக்கிய நிர்வாகிகள் அதிரடி வீட்டுக் காவல்!

Related Posts

தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
News

தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி
News

கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

March 26, 2026
போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு
News

போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு

March 26, 2026
சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்
News

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

March 26, 2026
Next Post
முதல்வர் வருகைக்கு கறுப்புக்கொடி காட்டத் திட்டம் முக்கிய நிர்வாகிகள் அதிரடி வீட்டுக் காவல்!

முதல்வர் வருகைக்கு கறுப்புக்கொடி காட்டத் திட்டம் முக்கிய நிர்வாகிகள் அதிரடி வீட்டுக் காவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

October 30, 2025
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

March 25, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

0
போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு

போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு

0
சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

0
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

March 26, 2026
போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு

போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு

March 26, 2026
சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

March 26, 2026

Recent News

தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

March 26, 2026
போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு

போக்சோ வழக்கில் எதிரிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை & ரூ.10,000/- அபராதம்  பரபரப்பு தீர்ப்பு

March 26, 2026
சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம்

March 26, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.