அதிமுக – பாஜக… எங்கள பிரிச்சு பாருங்க பாப்போம்..! – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதை எந்தவித சக்தியாலும் உடைக்க முடியாது – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி…

எமர்ஜென்சி இன்றோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்று இருக்கக் கூடிய இளைய சமுதாயத்திற்கு, எமர்ஜென்சியின் உடைய, நெருக்கடியான கால கட்டத்தில் எப்படி ? இந்திய ஜனநாயகம் இருந்தது என்பது பற்றி எல்லாம் எடுத்துச் சொல்வதற்காக, பாஜக சார்பில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதை எந்தவித சக்தியாலும் உடைக்க முடியாது.மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. சித்தாந்தம் இருக்கிறது, அவரவர் அந்தந்த சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க மீது விடுதலை சிறுத்தைகள் எத்தனை முரண்பாடுகளை வைத்து இருக்கிறார்கள், ஆனால் அனைவரும் கூட்டணியோடு தான் இருக்கிறார்கள்.

அதைப்பற்றி எல்லாம் யாரும் பேசுவது இல்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க என்றால் உடனே விரித்தால் என குறிப்பிடுகிறீர்கள்.தி.மு.க வீட்டுக்கு போவது உறுதி என கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநாடு நடத்தவில்லை, மாநாட்டில் கலந்து கொண்டு சருக்கிறோம். அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி அழைப்பு கொடுத்தார்கள் அது போன்று தான் நாங்களும் அதில் பங்கு பெற்றோம். அதில் அவர்களுடைய கருத்துக்களை பகிர்வதில் அவரவரின் விருப்பம்.

அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே சமயம், இந்து முன்னணியின் கொள்கையை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது என கூறினார்.

அதிமுக தலைமையில் இங்கு ஆட்சி நடக்கும் என அமித்ஷா கூறி இருக்கிறார். நிச்சயம் கூட்டணி ஆட்சி நடைபெறும் எனக் கூறினார்.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு,தமிழகத்தில் போதை கலாச்சார தலை தூக்கி இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அதன் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்குமே அதைப் பற்றிய கவலை இருக்கிறது அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இதைத் தாண்டி இதற்கு என்று தனியாக, அமைப்புகள் இருந்தாலும் கூட, அவர்கள் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா,எப்பொழுதுமே தன்னுடைய தரக்குறைவான பேச்சின் மூலம் கவனத்தை ஈர்ப்பவர்.மத்திய அமைச்சரை மிக தரக்குறைவாக விமர்சித்து இருக்கிறார். இதை நாங்கள் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசியல் ரீதியாக ஆட்சி ரீதியாக எந்தவித விமர்சனத்தை வேண்டுமானாலும் முன் வைக்கலாம் ஆனால் தனி மனித விமர்சனத்தை முன்வைக்க கூடாது. இதைத் தொடர்ந்தால் எங்களுடைய தொண்டர்களின் விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

Exit mobile version