மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாப்படுகை சுமங்கலி காளியம்மன் ஆலய 43ம் ஆண்டு தீமிதி திருவிழா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தலையில் சுமந்து தீ மிதித்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது :-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாப்படுகை ரெயில் கேட் அருகில் உள்ளது சுமங்கலி காளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறும். இத்தீமிதி திருவிழா நடைபெறாமல் இருந்தது. 43ஆம் ஆண்டு மிக சிறப்பாக, இக்கோயிலில் பத்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து, இன்று காவிரி கரையிலிருந்து, கரகம், அலகு காவடி, பால்குடம் சுமந்து பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். இத்தீமிதி திருவிழாவை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு இருந்து, தீமிதியை கண்டு களித்து, சுமங்கலி காளியம்மனின் அருளை பெற்றனர். தீமிதியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் சுமந்தும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளவும் தீமிதித்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
