ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் : லெபனான் ஹிஸ்புல்லாவை தாக்கும் இஸ்ரேல் !

ஈரானுடன் அதிகரித்து வரும் அணு ஆயுதம் தொடர்பான பதற்றத்தின் தொடர்ச்சியாக, இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் ஆதரவுடன் செயல்படும் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி முகமது காதர் அல்-ஹுசைனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) உறுதிப்படுத்தியுள்ளது. அவர், நஹாரியா மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும், சமீபத்தில் அந்த அமைப்பின் பீரங்கி பிரிவுகளை மீண்டும் செயல்படச் செய்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு முந்தைய தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் முகமது அஹ்மத் க்ரைஸ் என்பவர், செபா பகுதியில் செயல்பட்ட ஹிஸ்புல்லாவின் டாங்க் எதிர்ப்பு ஏவுகணை பிரிவை வழிநடத்தியவராக இருந்தார். ஏப்ரல் 26 அன்று மவுண்ட் டோவ் மீது நடத்திய தாக்குதலுக்கு அவர் நேரடியாக பொறுப்பேற்றிருந்தார்.

இந்த தாக்குதல்களை முற்றிலும் நீதிகரமாக்கும் வகையில், “பயங்கரவாதம் இருந்தால், ஹிஸ்புல்லா இருக்காது” எனக் கடுமையாக எச்சரித்துள்ள இஸ்ரேல், தற்போது வடக்கு எல்லைக்கு அச்சுறுத்தல்களை தணிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு அமைப்புகளை அழிக்க தீர்மானித்திருப்பது தற்போதைய மத்திய கிழக்கு பதற்றத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

Exit mobile version