மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசிற்கான பெரும் செலவுகள் எதுவும் இல்லாத சூழலில் நிதி பகிர்மானத்தில் மாநில அரசுக்கு 75 சதவீதமும் மத்திய அரசுக்கு 25 சதவீதமாக நிதி பகிர்வு இருக்க வேண்டும் நீட் தேர்வை விட கொடூரமான தேர்வு என்பது ஆசிரியர் தகுதி தேர்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிர்ணயிக்கும் உச்சநீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிர்ணயித்துள்ளது என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி
சுந்தரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது இதனை ஒட்டி நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலைக்கு அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வ உ சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளையொட்டி மணிமண்டபத்தில் ஒலி ஒளி காட்சி அமைப்பதற்காக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
வ உ சி மணிமண்டபத்தின் வளாகத்தில் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காக தியாகம் செய்த வ உ சிதம்பரனாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது அவர்களே வரியை எட்டு ஆண்டுகளாக கூட்டி வைத்து இப்போது குறைத்துள்ளனர். மக்களை கசக்கி பிழிந்து வரியை பிரித்தனர் அதனை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இப்போது வரியை குறைத்ததாக விளம்பரம் செய்கிறார்கள் வரி குறைப்பால் மாநில அரசிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்குமா என்பது தெரியவில்லை.
எதை செய்தாலும் மத்திய அரசுக்கு தான் நன்மை கிடைக்கும். இது மக்களுக்கும் மாநில அரசுக்கும் நன்மையான காரியம் கிடையாது. மாநில அரசுதான் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வியை கொடுக்கிறது. தமிழகத்தில் காலை சிற்றுண்டி தொடங்கிய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. வரியை குறைவாகத்தான் மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிறது . மத்திய அரசிற்கு வருமானவரித்துறை வருவாய், பெட்ரோலிய பொருட்களின் வருவாய் உள்ளிட்டவைகள் மூலம் வருவாய் வந்து கொண்டிருக்கிறது.
இதிலிருந்து மாநில அரசுகளுக்கு பங்கு கொடுப்பது கிடையாது. ஜிஎஸ்டி வருவாய் மூலம் 50 சதவீதம் மாநில அரசிற்கு நிதி பகிர்மானம் இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு வரி வருவாய் மூலம் கிடைக்கும் பணத்தில் எந்த செலவும் கிடையாது விமானம் ரயில்வே உள்ளிட்டவைகள் மூலம் தொடர்ந்து மத்திய அரசிற்கு வருவாய் வந்து கொண்டு தான் இருக்கிறது. கோடி கோடியாக வருவாய் கிடைத்து வருகிறது ஆனால் பிரதமரின் நண்பர்களுக்கு நிதியை கொடுத்து அவர்களுக்கு தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறார்கள்.
நிதி பகிர்மானம் மத்திய அரசிற்கு 25% மாநில அரசிற்கு 75% இருக்க வேண்டும். மாநில அரசுதான் சுய உதவி குழுக்களுக்கு, விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்கிறது. நிதி மாநில அரசுக்கு தான் தேவை நீதி பகிர்மானத்தில் 75% மாநிலத்திற்கு வழங்க வேண்டும். விமானங்கள் அனைத்தையும் விற்று தீர்ந்து விட்டது பாரத பிரதமருக்கு மட்டும் ஒரே ஒரு விமானம் உள்ளது விமான நிலையம் அனைத்தும் அதானிக்கு கொடுக்கப்பட்டு விட்டது பொதுத்துறை நிறுவனங்களுக்கு செலவு செய்வதற்கான தேவைகள் எதுவும் கிடையாது. திமுக அரசு கொள்கை பிடிப்போடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் காமராஜர் கலைஞர் அதே வழியில் முதல்வர் இப்போது ஆட்சி செய்து வருகிறார் கல்வியை மிக முக்கியமாக கருதுகிறார்கள். படிக்க விடாமல் மாணவ மாணவிகளை தடுப்பது தான் தேர்வு முறை நமக்கு இருக்கும் தேர்வு முறை 10., 12 என்பது சரி. இந்திய அளவில் வேலைக்கு செல்வதில் பெண்கள் அதிக அளவில் இருப்பது தமிழகத்தில் தான் கல்விக்கு தமிழகம் முக்கியத்துவம் அதிக அளவு கொடுத்து வருகிறது. நீட் தேர்வை போன்று கொடூரமாண தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வு. அரசு அரசு உதவி பெறும் பள்ளிக்கு தான் இந்த தேர்வு முறை என சொல்கிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என ஒன்றும் இதுவரை சொல்லவில்லை. ஆசிரியர்கள் சான்று பெற்றுள்ளார்கள் அவருக்கு இது போன்ற தேர்வு முறை அவசியமே கிடையாது கல்விக் கொள்கைகள் மாநில அரசிடம் இருந்தால் மட்டுமே இது போன்ற விஷயங்களை சரி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.