தமிழனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது, சினிமாவில் இருந்து நேராக தமிழ்நாட்டின் இருக்கைக்கு வரவேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களை சில தமிழர்களும் ஆதரிக்கிறார்கள் முடிவு தேர்தலின் போது தெரியும், நடிகர் விஜய் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சனம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வருகை புரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறும்போது, தமிழீழ மண்ணில் நமது தொப்புள்கொடி உறவுகளை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்த சிங்கள பேரின அரசின் இனப்படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் அதுபோல் உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி, தனித்தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும். அதற்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை இயற்றி 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதன் மூலம் ஐக்கிய நாடு சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடஇந்தியர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடி இன்று கோடி கணக்கில் அது மாறி நிற்கிறது சுமார் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட தமிழர் அல்லாத குறிப்பாக இந்திய தாய்மொழியாக கொண்ட வடவர்கள் தமிழ்நாட்டில் நீக்கமர நிறைந்திருக்கிறார்கள் 2014 பாரதி ஜனதா பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு நாங்கள் இந்திக்காரர்களை அனுப்பி வைக்கிறோம். என்கிற ஒரு முடிவான பிடிவாதத்தோடு இங்கு அனுப்பி வைக்கப்பட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான குடும்ப அட்டை அவர்களுக்கான ரேஷன் அட்டை அவர்களுக்கான வாக்காளர் அட்டை ஒரே நாடு ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரம் என்று ஒற்றக் கொடியின் கீழ் நரேந்திர மோடி இந்தியாவில் ஆட்சி செலுத்த விரும்புகிறார். இந்தியா என்பது பல்வேறு மொழி தேசிய இனங்களைக் கொண்ட ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த பூமி. இங்கு ஆயிரம் மதங்கள் இருக்கலாம் ஆயிரம் சாதிகள் இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று ஒற்றுமையுடன் வாழ்கின்ற இந்த நாட்டில் இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறேன் மக்களை கூறு போடுகின்ற ஒரு மோசமான ஒரு ஆர்எஸ்எஸ் சங் பரிவாரக் கும்பல்களின் அஜந்தாவை நிறைவேற்றுகிற ஒரு அரசியல் கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி, அந்த கட்சி திட்டமிட்டு தமிழ்நாட்டில் தற்போது சுமார் 70 லட்சத்துக்கு மேற்பட்ட வட இந்தியர்கள் தமிழ்நாட்டை தாயகமாக கொள்ளாத தமிழ் மொழி தாய் மொழியாக கொள்ளாதவர்களை வாக்காளர்களாக 2026 வாக்களிக்கக்கூடிய சூழல் இருக்கிறது. பீகாரில் நீக்கம் செய்யப்பட்ட 60 லட்சம் வாக்காளர்களில் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நமக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது ஸ்டேட் என்ட்ரி பர்மிட் என்ற முறையைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். இது அசாம் மிசோரம் மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோல் தமிழ்நாட்டில் உரிமைகள் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்தார். வட இந்தியர்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ் மொழியின் கலாச்சாரம் தமிழ் மொழியின் தொன்மை பன்முகத்தன்மை அழியும். பாரதிய ஜனதா கட்சி என்ற மனித குல விரோத கட்சியில் இருந்து கொண்டு தமிழராக இருக்கிறார் என்பதற்காக பிஜேபி சார்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க முடியாது. சென்னையில் போராடிவரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இத்தனை ஆண்டு காலம் பணிபுரிந்ததற்கான பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் ஆகியவை தர வேண்டும். நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திரு வேல்முருகன் சினிமா நடிகர்கள் குறித்த கேள்விக்கு தான் பதில் அளிப்பதில்லை என்றும், சினிமாவிலிருந்து நேரடியாக தமிழகத்தின் இருக்கைக்கு தான் வருவோம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களையும் தமிழர்களில் ஒரு பிரிவினர் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் யாருக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம், என்று தெரிவித்தார்.