திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில், ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்காததையும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை புறக்கணித்ததையும் கண்டித்து, தமிழ்நாடு அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், உயர் கல்வித்துறை செயலர், கல்லுாரி கல்வி இயக்குநர் மற்றும் கோவை மண்டல இணை இயக்குநர் ஆகியோர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அமர்வு, அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து மனுவை தள்ளுபடி செய்து.
அரசின் நடவடிக்கையை ‘துரதிருஷ்டவசமானது’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 1987-ம் ஆண்டு விதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்புதல் அளித்தமைக்கு ஆதாரமாகும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல், உண்மையை மறைத்ததற்காக அதிகாரிகள் மீது கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அபராத தொகையின் பகிர்வு:
ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள ரூ.32 லட்சத்தில், ரூ.16 லட்சம் கேன்கேர் பவுண்டேஷன் மற்றும் நேத்ரோதயா அமைப்புகளுக்கு எட்டு வாரங்களில் வழங்க வேண்டும்.
பொறுப்பேற்க வேண்டியோர்:
ரூ.25 லட்சம், முன்னாள் கல்லுாரி கல்வி இயக்குநர் பூர்ண சந்திரனிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
மற்ற ரூ.25 லட்சம், ஆவணங்கள் மாயமானதற்கு பொறுப்பேற்க வேண்டிய அதிகாரர்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும்.
அத்துடன், ஊதியம் பெறாத 12 ஊழியர்களுக்கு எட்டு வாரங்களில் பணம் வழங்க வேண்டும் என்றும், ஆவணங்களை மறைத்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.