மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த தாக புராண வரலாறு தெரிவிக்கும் இந்த ஆலயம் குறித்து தேவாரப் பாடல்கள் பாடல் பெற்றுள்ளன. ஆலயத்தில் 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பத்து நாள் உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் சுவாமி மற்றும் அம்பாள் சர்வ அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மயூரநாதர் அபயாம்பிகை ஊஞ்சலில் எழுந்தருள, எதிரே மயிலம்மன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், திருவாசகப் பாடல்களை பக்தர்கள் பாட, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்
-
By Satheesa

- Categories: Bakthi, News
- Tags: district newsMayuranathar Templetamilnadu
Related Content
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது
By
Satheesa
February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்
By
Satheesa
February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்
By
Satheesa
February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது
By
Satheesa
February 10, 2026