மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த தாக புராண வரலாறு தெரிவிக்கும் இந்த ஆலயம் குறித்து தேவாரப் பாடல்கள் பாடல் பெற்றுள்ளன. ஆலயத்தில் 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பத்து நாள் உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் சுவாமி மற்றும் அம்பாள் சர்வ அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மயூரநாதர் அபயாம்பிகை ஊஞ்சலில் எழுந்தருள, எதிரே மயிலம்மன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், திருவாசகப் பாடல்களை பக்தர்கள் பாட, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்
-
By Satheesa

- Categories: Bakthi, News
- Tags: district newsMayuranathar Templetamilnadu
Related Content
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
By
Satheesa
May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்
By
Satheesa
May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு
By
Satheesa
May 12, 2026