மாத்தூர் தொட்டி பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும், என பல்வேறு தீர்மானங்களுடன் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மாநில மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம்: மாத்தூர் தொட்டி பாலத் திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும், அரசு மருத் துவக்கல்லூரி மற்றும் மருத்து வமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களுடன் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மனித பாதுகாப்பு கழகம் சார்பில் எட்டாவது மாநில மாநாடு ஜெயமோகன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் முக்கிய அம்சமாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் அதிக அளவில் கிராம்பு உற்பத்தியாவ தால் இங்கு மதிப்பு கூட்டல் மற்றும் உற்பத்தி செய்யும் தொழில் கூடம் அமைக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த ரப்பர் குமரி மாவட்டத்தில் கிடைப்பதால் குமரியில் உலகத்தரம் வாய்ந்த ரப்பர் தொழிற்சாலை மற்றும் ரப்பர் பூங்கா அமைக்க வேண்டும்,மாத்தூர் தொட்டி பாலத் திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும், அரசு மருத் துவக்கல்லூரி மற்றும் மருத்து வமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு இலவச தையல் மிஷின்கள், குக் கர்கள், முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Exit mobile version