திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேலாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளின் பின்விளைவாக, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் மேலாய்வு (Supercheck) தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன் தலைமையில் நடத்தினர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, 04.11.2025 முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 19,26,478 (99.59%) கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) வழங்கப்பட்டுள்ளன. இதில் 15,37,131 (79.46%) படிவங்கள் பூர்த்தி செய்து மீளப்பெற்றும், கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போதைய கால அட்டவணை 11.12.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட படிவங்களில் உள்ள வருகையின்மை (Absent), இடம்பெயர்ந்தோர் (Shifted), இறப்பு (Death) மற்றும் கண்டுபிடிக்க இயலாதவைகள் (untraceable) ஆகியவற்றின் மேலாய்வு பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் பின்வருமாறு:

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறுஆய்வு (BLO recheck) – 100%வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் (BLO Supervisor) – 50% உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (AERO) – 25%வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO) – 10% அனைத்து வருவாய் கண்காணிப்பு அலுவலர்கள் (All Revenue Nodal Officers) – 5%

தோல்வியின்றி ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமல் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினர். 11.12.2025 வரையில் படிவங்களை திரும்ப ஒப்படைக்காத வாக்காளர்கள், 16.12.2025 முதல் 15.01.2026 வரை தங்கள் ஆட்சேபணை மற்றும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு செய்யாதவர்கள் முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளின் வாயிலாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற வழி உள்ளது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா. ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு. செல்வன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு. முத்துமுருகன், செயல் அலுவலர் திருமதி. ஆர். இளவரசி, பேரூராட்சி தலைவர் திருமதி. பிரதீபா கனகராஜ் மற்றும் துணைத் தலைவர் திருமதி. ஆனந்தி பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version