திருத்துறைப்பூண்டி வரம்பியம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கிராம சபா கூட்டம்

உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பு கிராம சபா கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பாரத இயக்கம் மூலம் ஊராட்சி உள்ள அனைத்து பகுதிகளிலும் சுத்தமாக வைத்து இருத்தல்
ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மற்றும் குப்பை மக்காத குப்பைகளை என தரம் பிரிக்கப்பட வேண்டும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கவும் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக மஞ்சள் துணிப்பை பயன்படுத்த வேண்டும்
பொது இடங்களில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் நமது ஊராட்சியினை தூய்மையான கிராமமாக மாற்றுவது என தீர்மானிக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன
தொடர்ந்து அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்

Exit mobile version