நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோயிலை 108 முறை வலம் வந்து தரிசனம்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 900 ஆண்டு தொன்மை வாய்ந்த அருள்மிகு சுந்தர நாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில். உள்ளது. இக்கோவில் பரணி நட்சத்திர பரிகார தலமாக விளங்கி வருகிறது.
மார்கண்டேயரை பெற மிருகண்ட மகரிஷி தவமிருந்த தலம், இந்திரன் மகாவிஷ்ணு பூஜித்த தலம், சோழ மன்னனுக்கு பிரமஹத்தி தோஷம் நிவர்த்தியான இத்தலம் ஆகும், இத்தலத்தில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும் மற்றும் தோஷம் நீங்கும் தலமாக இருப்பது சிறப்பானதாகும். பல்வேறு சிறப்பு கொண்ட இக்கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு அக்னீஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், தொழிலதிபர் கலைஞர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கோவிலை 108 முறை வலம் வந்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியம், மற்றும் மற்றும் பக்தி பாடல்கள் இன்னிசை கலை நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் பக்தர்களை கவர்ந்தது.

.

Exit mobile version