சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் தமிழர்களுக்கு முக்கிய இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு தமிழர்கள் முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மே 23ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், மொத்தம் 97 இடங்களில், ஆளும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி (PAP) 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து நடத்தும் உரிமையை பெற்றது. இதையடுத்து, புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
அமைச்சரவை மற்றும் முக்கிய பதவிகளில் இடம் பெற்ற தமிழர்கள் :
- கே. சண்முகம் – உள்துறை அமைச்சராக நியமனம்.
- விவியன் பாலகிருஷ்ணன் – வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம்.
- இந்திராணி ராஜா – பிரதமர் அலுவலக அமைச்சராக நியமனம்.
- தினேஷ் வாசு தாஷ் – தென்கிழக்கு மாவட்ட மேயராக நியமனம்.
- ஜனில் புதுசேரி – கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த இணை அமைச்சராக நியமனம்.
- முரளி பிள்ளை – சட்டம் மற்றும் போக்குவரத்து துறையின் மூத்த துணை அமைச்சராக நியமனம்.
இந்த நியமனங்கள், சிங்கப்பூரில் தமிழர்களுக்கான அரசியல் பங்கு மற்றும் சமூக பங்களிப்பை பிரதிபலிக்கின்றன.