March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் : வரலாற்று சாதனைப் பதிவு செய்த சுப்மன் கில் !

by Priscilla
July 4, 2025
in Sports
A A
0
இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் : வரலாற்று சாதனைப் பதிவு செய்த சுப்மன் கில் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் இளம் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில், தன்னம்பிக்கையுடன் பாட்டிங் செய்து இரட்டை சதமடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த தொடரில் தோல்வி கண்ட இந்திய அணி, WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டதால், வெற்றிக்கான கட்டாய சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தி 87 ரன்கள் எடுத்தார். ஆனால் கே.எல்.ராகுல் (2), கருண் நாயர் (31), ரிஷப் பண்ட் (25) போன்ற முக்கிய வீரர்கள் சீக்கிரமே வெளியேறினர்.

அப்போது களத்தில் இருந்த சுப்மன் கில், அழுத்தமான சூழ்நிலையில் முழு பொறுப்பையும் சுமந்து ஜடேஜாவுடன் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜடேஜா 89 ரன்களில் வெளியேறியபோதும், சுப்மன் கில் தன்னம்பிக்கையுடன் ஆடி 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 251 ரன்களை கடந்தார்.

இந்த சாதனையின் மூலம் :

SENA நாடுகளில் இரட்டை சதமடித்த முதல் ஆசிய கேப்டனாகவும், இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டனாகவும், விராட் கோலிக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் சதமடித்த இரண்டாவது இந்திய கேப்டனாகவும், 23 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதமடிக்கும் இந்திய வீரராகவும் சுப்மன் கில் புதிய வரலாற்றை எழுதியுள்ளார்.

133 ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 537 ரன்கள் எடுத்துள்ளது. கில் 251 ரன்களுடன் ஜெட் போல களத்தில் நிற்க, வாஷிங்டன் சுந்தர் 31 ரன்களுடன் அவருக்கு துணையாக உள்ளார்.

இந்த தொடரின் திருப்புமுனையாக இந்த போட்டி அமையுமா ? சுப்மன் கிலின் அபார ஆட்டம் இந்தியாவுக்கு ஆறுதலாகுமா என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Tags: englandindiaShubman Gilltest cricket
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 04-07-2025

Next Post

பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ் : டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 
News

மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி
News

CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

February 23, 2026
திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி

February 18, 2026
Next Post
பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ் : டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ் : டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

0
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

0
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

0
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

0
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026

Recent News

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.