நைஜர் :
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பஸோ ஆகிய நாடுகளுடன் எல்லை பகுதியிலுள்ள பனிபங்கோ நகரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இரு சக்கர வாகனங்களில் வந்த 200-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், அங்கு இருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 34 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 14 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் நைஜரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் தங்களது பாதுகாப்பிற்காக மீண்டும் எதிர்வினை வழங்கி, 12-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் நைஜர் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.