“கும்பகோணம் கோயிலில் 75 வயது ‘அர்ச்சர்’ வேட்டை : சிறுமி கண்ணீரில் அதிர்ச்சி !”

தஞ்சாவூர்: பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறைகள் இன்னும் சமூகத்தில் பரவலாக உள்ளன. சமீபத்தில் கும்பகோணத்தில் 75 வயது அர்ச்சகர் ஒருவர், 13 வயது சிறுமியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயத்தில் அர்ச்சராக செயல்பட்ட விஸ்வநாதர் (75) கடந்த மாதம் 8ம் தேதி, பாபநாசம் மெலட்டூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை குறிவைத்து அசிங்கமான செயலில் ஈடுபட்டார். சிறுமி கோயிலில் தனியாக வந்தபோது விஸ்வநாதர் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சிறுமி உடனடியாக பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே கோயில் நிர்வாகத்துக்கும், கும்பகோணம் மகளிர் போலீசிற்கும் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், விஸ்வநாதரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கோயிலுக்கு வந்த சிறுமி மீது 75 வயது அர்ச்சகர் செய்த அசிங்கமான செயல், கும்பகோணத்தில் பரபரப்பையும், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை செய்து, சம்பவத்தில் பிற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Exit mobile version