காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே 11 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 வயதுடைய மாணவி 11ம் வகுப்பு பயின்றுவருகிறார். இதையடுத்து, பழக்கம் வாய்ந்த சில மாணவர்கள், மாணவியுடன் நட்பு ஏற்படுத்தி, ஒரு நாளில் குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து தனியிடம் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, 2 சிறுவர்கள் உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள்மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களே இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்டது பள்ளி மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது