திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் 2081 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடனே அமர்ந்து உணவு அருந்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் சுமார் 281 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்…
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் தமிழகமெங்கும் உள்ள நகராட்சி மாநகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடனே அமர்ந்து உணவு அருந்தினார்.
அதே போன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.















