தனித்தனியாக ஆலோசனை… தொடரும் திட்டங்கள் – பாமகவில் ராமதாஸ், அன்புமணி அணிகள் செயல்படும் விதம் !

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், இருவரும் தனித்தனியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இதுவரை 46 மாவட்ட செயலாளர்கள், 25 மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக, முன்னாள் மாநிலத் தலைவர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு, பூபால கண்ணன் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை, பாமக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதவி மாற்றங்களைத் தொடர்ந்து, தைலாபுரம் இல்லத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இது, அவரின் தனிப்பட்ட அணியோடு மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

மற்றொருபுறம், அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சி வளர்ச்சிக்கும், உறுப்பினர் சேர்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டக் கூட்டங்கள் நடைபெறும் தேதி மற்றும் மாவட்டங்கள் :

ஜூன் 15: திருவள்ளூர், செங்கல்பட்டு

ஜூன் 16: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை

ஜூன் 17: வேலூர், திருப்பத்தூர்

ஜூன் 18: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி

ஜூன் 19: சேலம், தர்மபுரி

இந்த கூட்டங்களில், உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்பு வலுப்படுத்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் நிலவும் தற்போதைய சூழல், தலைமை மாற்றங்கள், மற்றும் இரு தலைமைகளும் வகுக்கும் தன்னிச்சையான திட்டங்கள் – இவை கட்சியின் எதிர்காலத் திட்டங்களை தீர்மானிக்கப் போவதாகக் கருதப்படுகிறது.

Exit mobile version