December 8, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

by sowmiarajan
December 7, 2025
in News
A A
0
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், பிளஸ்-2 மாணவர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் கவியரசன் (17), கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தப் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாகவே மோதல்கள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, கடந்த செப்டம்பர் மாதம் மாணவர் கவியரசன் மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அதில் பிளஸ்-1 மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாகக் காவல்துறை இருதரப்புப் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது. சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி மதியம் மீண்டும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு கவியரசன் தனது நண்பர்களுடன் பள்ளியில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, அங்கு வந்த பிளஸ்-1 மாணவர்கள் கவியரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் தீவிரமடைந்து, இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது பிளஸ்-1 மாணவர்கள், கவியரசனை மரக்கட்டையால் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த கவியரசனை, சக மாணவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மாணவர் கவியரசனின் உடல்நிலை மோசமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் மாணவர் கவியரசன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், கவியரசனைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 15 பிளஸ்-1 மாணவர்களை நேற்று முன்தினம் (டிசம்பர் 5) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தஞ்சையில் உள்ள இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கிருந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். மாணவர்களின் மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த இச்சம்பவம், பள்ளி வளாகங்களில் நிலவும் வன்முறையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Tags: education-related newsKumbakonam tragedySchool incidentstudent fightyouth violence
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Next Post

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

Related Posts

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு
News

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது
News

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது

December 7, 2025
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,
News

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

December 7, 2025
மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
News

மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

December 7, 2025
Next Post
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

திருப்பரங்குன்றம் பிரச்சனையை திசை திருப்புகிறார் முதல்வர் – நைனார் குற்றச்சாட்டு

December 7, 2025
வரலாறு தெரியாமல் எங்களோடு மோத வேண்டாம் – விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

2026-லும் திமுக அரசு தொடரும் மலிவான அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள் – ஸ்டாலின் உறுதி

December 7, 2025
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி

0
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

0
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது

0
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

0
ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி

December 7, 2025
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது

December 7, 2025
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

December 7, 2025

Recent News

ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி

December 7, 2025
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம்திங்களன்று கூடுகிறது

December 7, 2025
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

December 7, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.