மணல் மோசடி குற்றச்சாட்டு: செல்லராஜாமணி மீது நடவடிக்கை கோரி லாரி உரிமையாளரபுகள் புகார்

மணல் மோசடி குற்றச்சாட்டு: செல்லராஜாமணி மீது நடவடிக்கை கோரி லாரி உரிமையாளரபுகள் புகார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த செல்ல ராஜாமணி மீது மோசடி, மணல் கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக கடுமையான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் படி, “தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்” என்ற பெயரில் போலிச் சங்கம் நடத்தி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மணல் குவாரிகளில் முறைகேடாக ஈடுபட்டு, அதிகாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவரது செயல்பாடுகளால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்கள் குவித்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான அனுமதி இல்லாமல் மணல் ஏற்றச் சொல்லி, லாரி உரிமையாளர்களிடம் பணம் பறித்ததால் பலர் கடன் சுமையில் சிக்கி, வாகனங்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்ல ராஜாமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யவும், போலிச் சங்கத்தை கலைக்கவும், பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version