பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் பெற்ற அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது நடைபெற்றது.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள அன்னதான கூடத்தில் அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது இதில் திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்தா விஜயகுமார் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு பரிமாறி சமபந்தியினை தொடங்கி வைத்தார் மேலும் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கோவில் அர்ச்சகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

















