டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

புதுடில்லி: இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

நேற்று மாலை டில்லியின் பாலம் விமான நிலையம் வந்தடைந்த புடினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் புடினை இணைந்து வரவேற்றனர். மரியாதை நிகழ்ச்சிக்குப் பின், புடின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகள்

பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் இந்தியா–ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்கிறார். மாநாட்டிற்குப் பின்னர், பிரதமர் மோடி மதிய உணவு விருந்தை அளிக்கிறார்.

தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளில் புதிய உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி விருந்தில் பங்கேற்பு

உச்சி மாநாட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்கிறார். இன்று இரவு 9 மணி அளவில் அவர் டில்லியில் இருந்து புறப்பட்டு மாஸ்கோக்கு திரும்ப உள்ளார்.

Exit mobile version