திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் விஜய்ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
பிரதான கோரிக்கையாக சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சாலை மறியல் காரணமாக திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது















