விழுப்புரம் நகரில் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையை சீரமைப்பு கோரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் சாலை சீரமைப்பு பணியைத் தொடங்கி வைத்து சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் சாலாமேட்டு பகுதியில் செயல்படும் எம்.ஜி.ஆர். மகளிர்கல்லூரியில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்கு படித்து வருகின்றனர்.கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமான சாலையாக இருந்தது,பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சிக்கும் புகார் அளிக்கும் எந்த நடவடிக்கை எடுக்காததால். கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்தக் குழியான சாலையால் மாணவிகளும், அப்பகுதி வாசிகளும் சாலையில் செல்ல பெரும் அவதிப்பட்டனர். அதனை தொடர்ந்து சாலையை சீரமைக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரிடம் சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்தனர் .மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், உடனடியாக சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ,அவர் நேரில் வந்து, சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்து, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். வரான உடனடியான எச்சரிக்கை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மாணவிகள் தெரிவித்தனர்.

















