ஓம் என்ற ஒலியின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்த முடியும் என்ன ஜப்பானில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன, பூம்புகார் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு சொற்பொழிவில் பங்கேற்ற ஜப்பான் நாட்டின் ஆன்மீக கல்வி அமைப்பின் முதல்வர் கோகோன் – மருஹிகோ பேச்சு :-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் கல்லூரியில் தமிழ் துறை தத்துவம் சமயம் மற்றும் பண்பாட்டு துறை சார்பில் சர்வதேச சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜப்பான் சேர்ந்த AmetuSuchi lyasaka Juku என்ற ஆன்மீக கல்வி அமைப்பின் முதல்வர் மற்றும் நிறுவனர் ஆகிய கோகோன் – மருஹிகோ பங்கேற்று உலக மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஜப்பானிய ஆன்ம விழிப்புணர்வு என்ற பெயரில் சிறப்புரை ஆற்றினார். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு ஜப்பானிய மொழியில் பதில் அளித்தார். அவர் பேசும்பொழுது தமிழ்நாட்டில் மட்டுமே கலாச்சாரத்துடன் அறிவியல் கலந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களில் வழிபாட்டு முறைகள் ஒரே மாதிரி உள்ளது எனவும், தமிழ்நாட்டில் உள்ளது போல் முருகர் வழிபாடு சரஸ்வதி வழிபாடு, காலபைரவர் வழிபாடு ஆகியவை சில சில மாற்றங்களுடன் ஜப்பானில் நடைபெற்று வருவதாகவும், இது குறித்த ஆய்வுக்காக தமிழ்நாடு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பானில் குறிப்பிட்ட அளவிலான மெகா ஹெட்ஸ் ஒலி அலைகளை பயன்படுத்தி நோய்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், இதில் ஓம் என்ற ஒலியை ஒத்திருக்கும் ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்தான ஒலி எழுப்பும் கருவியையும் வாசித்துக் காட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவசக்திவேல், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
