அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறும் என ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கு போட்டியாக, அதே கட்சியின் இளைய தலைவரும் அவரது மகனுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஆகஸ்ட் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனால் கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமதாஸ் தரப்பில் இருந்து மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில், “அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கனவே மே 28 அன்று முடிந்துவிட்டது. அதையடுத்து, அவர் தனிமையாக பொதுக்குழு கூட்டத்தை அழைப்பது சட்டவிரோதம். அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. ஆனால் அதற்கு முன்பே தன்னைத் தலைவராக கூறி கூட்டம் நடத்தும் முயற்சியில் அன்புமணி ஈடுபட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version