ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் தம்பதி அழகர் கோவிலில் தரிசனம்

மதுரை அழகர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் உடன் நேற்று தரிசனம் செய்தது பக்தர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. சவுந்தர்யா–விசாகன் தம்பதி நேற்று அழகர் மலையை சுற்றிப் பல முக்கிய திருக்கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் சென்ற இடங்கள்: கள்ளழகர் திருக்கோவில் நூபுரகங்கை தீர்த்தம் ராக்காயி அம்மன் கோவில் சோலைமலை முருகன் கோவில் (ஆறாவது படை வீடு) 18-ம் படி கருப்பண்ணசாமி கோவில் ஒவ்வொரு சன்னதியிலும் தம்பதி அமைதியாக வழிபாடு செய்தனர்.

அனைத்து சன்னதிகளிலும் உள்நுழைந்து தரிசனம் செய்தபின், அழகர் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் 18-ம் படி கருப்பண்ணசாமி கோவிலில் தம்பதி சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவில் திருக் கதவுகளுக்கு சந்தனம், பூமாலை சமர்ப்பிக்கப்பட்டது தம்பதி முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அபிஷேகத்திற்குப் பிறகு அவர்கள் ஜோடியாக நின்று தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாகம் வழங்கும் சம்பா தோசை உள்ளிட்ட பிரசாதங்களையும் பெற்றனர்.சவுந்தர்யா–விசாகன் தம்பதியின் இந்த தரிசனம் அழகர் கோவில் பக்தர்களிடையே சிறிய பரபரப்பையும், ஆர்வத்தையும் உருவாக்கியது.

Exit mobile version