மதுரை :
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்ற உயரிய விருதை வழங்கி வருகிறது. இந்த விருது, பல்வேறு நிலைகளில் பணி செய்யும் 100 சிறந்த ரயில்வே ஊழியர்களுக்குத் தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்திலுள்ள மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் 26 ஊழியர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் பொது சேவை, பாதுகாப்பு, தொழில்நுட்பம், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
69 வது ரயில்வே வாரத்தை முன்னிட்டு மதுரை ரயில்வே கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற விழாவில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான குழு, சிறப்பாக பணியாற்றிய 26 ஊழியர்களுக்கு ‘ரயில் சேவா புரஸ்கார்’ விருதுகளை வழங்கினர். இந்த விழா ஊழியர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.