20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அளித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்…
சென்னையை சேர்ந்த முத்துலட்சுமி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு திருவாரூர் வந்த போது நகைகளுடன் கூடிய பையை தவற விட்டுள்ளார். நகை பையை கண்டெடுத்த திருவாரூர் நகராட்சி தூய்மை பணியாளர் துரை என்பவர் மீட்டு அதனை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பெண்மணி தவறவிட்ட 20 பவுன் தங்க நகைகளை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் துரை என்பவருக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் 4 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கி கௌரவித்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் துரையின் மகனுக்கு மருத்துவ உதவி கேட்ட நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நிதியுதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.

















