புல்வாமா தாக்குதலில் பலியான 40 இந்திய வீரர்களுக்கு மன்னார்குடியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

புல்வாமா தாக்குதலில் பலியான 40 இந்திய வீரர்களுக்கு மன்னார்குடியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் புல்வாமா என்ற இடத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். நாட்டுக்காக உயிர் இழந்த 40 வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விளையாட்டு மைதானத்தில் கன்ஃபிட் உடற்பயிற்சி மையம் சார்பில் மாணவர்கள் யோக செய்தும் சிலம்பம் சுற்றியும் ,ஏராளமானோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர் 40 வீரர்களின் உருவப்படங்கள் வைத்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பலகைக்கு ஏராளமான பொதுமக்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர்,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் அஞ்சலியும் செலுத்தினர்.

Exit mobile version