March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!

by sowmiarajan
December 12, 2025
in News
A A
0
சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மாவட்டத் தலைநகரான சிவகங்கையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியான ரயில்வே கிராசிங் பாலப் பணிகள், ரயில்வே துறையின் தாமதமான ஒப்புதல் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டதால், அப்பணிகளை விரைந்து முடித்து பாலத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை நகரின் வழியே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இரண்டு புறவழிச்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஒரு புறவழிச்சாலை (திருப்புத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை) பயன்பாட்டில் உள்ளது.

இரண்டாவது புறவழிச்சாலையான திருப்புத்தூர் சாலையில் உள்ள காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சாலை அமைக்கும் பணி மட்டும் நீண்ட காலமாகத் துவங்கப்படாமல் இருந்தது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்தச் சாலை, சுமார் 10.6 கி.மீ நீளமுடையதாகும். இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து செல்கிறது. இச்சாலையின் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், காஞ்சிரங்கல் ஊராட்சிப் பகுதியில் இருந்து மொத்தம் 10.6 கி.மீ தூரத்திற்குப் புறவழிச்சாலை அமைக்க ரூ. 109.51 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டது. முதற்கட்டமாக, மொத்தம் 7 கி.மீ தொலைவிற்கு ரூ. 77.16 கோடியில் சாலை அமைக்கும் பணி கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. காஞ்சிரங்காலில் இருந்து தொண்டி சாலை இணைப்பு, பழமலை நகர், ஆயுதப்படை குடியிருப்பு வழி இளையான்குடி சாலை இணைப்பு வரை சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன.

ஆனால், இந்தப் புறவழிச்சாலையின் முக்கியமான பகுதியான காஞ்சிரங்கால் ரயில்வே கிராசிங்கில் உள்ள பாலப் பணிகள் மட்டும் தண்டவாளங்களுக்கு மேல் செல்லும் பகுதியில் நடைபெறவில்லை. மற்ற பகுதிகளில் பாலப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தூரத்திற்கு மட்டும் பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், தண்டவாளங்களுக்கு மேல்புறம் பாலம் அமைக்க ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே பணி துவங்குவதில் காலதாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போதுதான் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலம் துவங்கும் இடம் வரை மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கூறுகையில், ரயில்வே துறை ஒப்புதல் வழங்க தாமதம் செய்ததால் தான் ரூ. 109.51 கோடி செலவில் தற்போது சாலை அமைத்தும் அது முழுமையாகப் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். மேலும், இந்தப் பிரச்னையால் தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகின்றன என்று வேதனை தெரிவித்தனர். எனவே, தண்டவாளத்திற்கு மேல் செல்லும் பகுதியில் பாலப் பணிகளை விரைந்து முடித்து, புறவழிச்சாலையை முழுமையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: infrastructure newspublic discontentroad construction delaySivaganga bypasstamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பருவமழை நீடித்ததால் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள் பூக்கவில்லை பயணிகள் ஏமாற்றம்

Next Post

‘சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!’ அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்
News

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்
News

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை
News

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026
Next Post
‘சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!’ அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

'சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!' அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

November 5, 2025
பாதுகாப்பு இல்லாத இடத்தில நாம் வாழ்கிறோம் – சீமான் விரக்தி

பாதுகாப்பு இல்லாத இடத்தில நாம் வாழ்கிறோம் – சீமான் விரக்தி

November 4, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.