திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு நியாய விலை கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தின்போது மாநில செயலாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டபொது விநியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் டி என் சி எஸ் சி எடை தராசும் நியாய விலை கடைகளலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், அனைத்து நியாய விலைகடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து நாளை கோட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் நாளை மறுநாள் வட்ட அளவிலான ஆர்ப்பாட்டமும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version