சட்டவிரோத குடியேறிகளை களையெடுக்கும் நடவடிக்கை எதிரொலியாக நகரங்களில் பரவும் போராட்டம்
லாஸ் ஏஞ்சலிஸ், அமெரிக்கா – அமெரிக்காவின் முக்கிய நகரமான லாஸ் ஏஞ்சலிசில் சட்டவிரோத குடியேறிகள் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், இது நாடு முழுவதும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
மத்திய படைகள் அனுப்பிய அதிபர் ட்ரம்ப் – கடும் கண்டனம் தெரிவித்த ஆளுநர்
கடந்த சில நாட்களாக லாஸ் ஏஞ்சலிசில் சட்டவிரோத குடியேறிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பதற்றம் நிலவ, தன்னிச்சையாக மத்திய படைகளை அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரம்ப்பின் நடவடிக்கையை ஆளுநர் நியூசம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“கலிஃபோர்னியாவில் இன்று நடந்தது நாளை மற்ற மாநிலங்களிலும் நடக்கும்” என கூறிய அவர், “மத்திய அரசு மாநில அரசின் அனுமதியின்றி படைகள் அனுப்புவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்றார். அதற்குப் பதிலாக ட்ரம்ப், “நான் படைகளை அனுப்பவில்லை என்றால், லாஸ் ஏஞ்சலிஸ் சாம்பலாகி இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
போராட்டம் மாறிய பரிதாபம் – ஊரடங்கு உத்தரவு பிறப்பு
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கொள்ளை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறியதால், லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் கேரன் பாஸ், முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.
அமெரிக்கம் முழுவதும் பரவும் பதற்றம்
இந்த விவகாரம் தற்போது லாஸ் ஏஞ்சலிசை கடந்துவிட்டது. நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், டென்வர், ஆஸ்டின், டாலஸ், பாஸ்டன், அட்லாண்டா உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.