பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் 70வயது நிரம்பியவருக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்,,தர ஊதியம் ரூ.5400 பெற்ற வந்த ஆசிரியர்களுக்கு 19 நாள் 7.2.2019 படி ஊதிய குறைப்பு செய்யாமல் தொடர்ந்து ரூ.5400தர ஊதியம் பெற்றிட திருத்த ஆணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜயராமன்,அரசு ஊழியர் சங்க செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
















