மயிலாடுதுறை நீட் தேர்வை நடத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டி மத்தியஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நீட் தேர்வை நடத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-

மயிலாடுதுறை ஸ்டேட் பாங்க் சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ராமானுஜம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், முறையான முழுப் பட்டியலை வழங்காமல் பிரதமர் மோடியின் விருப்பத்திற்காக ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் , அரசியல் உள்நோக்கத்துடன் இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது ஜனநாயக விரோதச் செயல் என்றும் , மேலும், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக 22 லட்சம் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்துவதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என குற்றம் சாட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Exit mobile version