டில்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி : இணையத்தில் வீடியோ வைரல் !

புதுடில்லி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். மரக்கன்றை நடும் போது அவர் குழி தோண்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழிகாட்டுதலின்படி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது இல்லத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றை நட்டார்.

சமீபத்தில் கச்ச் பகுதிக்கு விஜயம் செய்த பிரதமரை, 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் தனக்கேற்பட்ட துணிச்சலுக்காக பாராட்டப்பட்ட பெண்கள் குழு சந்தித்தது. அவர்கள், பிரதமருக்கு சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கினர். அப்போது, “இந்த மரங்களை நான் நட்டு பராமரிக்க உறுதி செய்கிறேன்” என பிரதமர் மோடி கூறியிருந்தார். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

200 எலெக்ட்ரிக் பஸ்கள் சேவையில்

இதற்கிடையே, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டில்லியில் 200 புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் சேவையில் நிறுத்தப்பட்டன. இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் டில்லி துணைநிலை ஆளுநர் வீ கே சக்சேனா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version