வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு சூடு பிடிக்கும்DMK-வின் தேர்தல்பணி மாநாட்டில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு; சூடு பிடிக்கும் திமுகவின் தேர்தல் பணி மாநாட்டில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு தயார் நிலை

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று (11-02-26) நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் (BYO) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார் அதற்கான முன்னேற்பாடு தயார் நிலையில் உள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர்கள் அமர்வதற்கு வாட்டர் பாட்டில் ஸ்னாக்ஸ் போன்ற வசதிகளை தயாராக வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் திமுக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது இந்த மாநாட்டில் முக்கிய சில அறிவிப்புகள் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகளுக்கு பல்வேறு சலுகைகள் வந்து செல்வதற்கு பல்வேறு சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version