“நான் RSS உடன் தொடர்புடையவன் ” – காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் மத்தியப்பிரதேசத்தில் அரசியல் பரபரப்பு !

போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தின் சுஸ்னர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பைரோன் சிங் பரிஹார் எழுப்பிய ஒரு கருத்து தற்போது அரசியல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், அவர் தான் RSS அமைப்புடன் தொடர்புடையவர் என கூறியிருக்கிறார்.

அந்த வீடியோவில் பைரோன் சிங் பரிஹார் கூறியதாவது :

“நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்றாலும், RSS சங்கத்துடன் தொடர்புடையவன். நான் ராஜ்புத் மகாசபா தேசியத் தலைவர் மான் சிங் திக்ரியாவைப் பற்றி பேசுகிறேன். அவர் போன்றவர்களை மதிக்கிறேன். நான் பல சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பணியாற்றியுள்ளேன்.”

இந்த வீடியோ வெளியாகியதும் பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் எழுந்தன. பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, வீடியோவை டேக் செய்து ராகுல் காந்திக்கு டாக் செய்துவிட்டு,

“காங்கிரஸ் எம்எல்ஏ தானாகவே RSS உடன் தொடர்பு உள்ளவரென ஒப்புக்கொள்கிறார். ராகுல் காந்தி, உங்கள் கட்சியில் இன்னும் சில நல்லவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்,”
என விமர்சனம் செய்தார்.

அதேபோல் பாஜக தனது இன்னொரு பதிவில்,

“ராகுல் காந்தி தினமும் விமர்சிக்கும் RSS அமைப்பை அவரின் சொந்த எம்எல்ஏவால் பாராட்டப்படுகிறது. ஸ்லீப்பர் செல்கள் மற்றும் குதிரைகளை வெளியே தேடாதீர்கள். அவை உங்கள் கட்சிக்குள்ளேயே இருக்கின்றன,”
என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் மத்தியப் பிரதேச காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த பரிஹார்,

“இந்த வீடியோ என் மீதான சதி. நான் பேசியது சோந்தியா சமாஜ் கூட்டத்தில். அங்கு இரண்டு பிரிவுகள் உள்ளன. என் பேச்சின் உண்மைத்தன்மையை மறைத்து, விரோதிகள் வீடியோவை தவறாக வெளியிட்டுள்ளனர். நான் எப்போதும் காங்கிரஸுடனேயே இருக்கிறேன். வீடியோவை வெளியிட்டவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன்,”
என்றார்.

Exit mobile version