ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ஜோதி மல்ஹோத்ரா, “Travel with Jo” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடைய சேனலுக்கு ஏறத்தாழ 4 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இந்நிலையில், மே 16ஆம் தேதி இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக வழங்கியதாகும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை (NIA) அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில், ஹரியானா மாநில காவல்துறையினர் ஜோதியின் வீட்டில் சோதனை நடத்தி, அவரது தனிப்பட்ட டைரியை கைப்பற்றினர். அந்த டைரியில் அவர் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டதற்கான விபரங்கள் பதிவாக இருந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதி எழுதிய பதிவுகளின் அடிப்படையில், அவர் பாகிஸ்தானுக்கு 10 நாட்கள் பயணம் செய்துள்ளார். “10 நாட்கள் பாகிஸ்தான் பயணத்திற்கு பிறகு இன்றுதான் என் நாட்டான இந்தியாவிற்கு திரும்பினேன். அங்கு எனக்கு பாகிஸ்தான் மக்களிடமிருந்து மிகுந்த அன்பு கிடைத்தது. லாகூரில் இரண்டு நாட்கள் இருந்தேன்,” என அவர் டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் குறித்து அவர் “வண்ணமயமான நாடு” எனவும், “அங்கே அனுபவித்த தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” எனவும் எழுதியுள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் அதிகாரியிடம், “பாகிஸ்தானில் உள்ள கோவில்களை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் பாகுபாடு காரணமாக பாகிஸ்தானில் பல இந்தியர்களின் உறவினர்கள் உள்ளனர். அவர்களை சந்திக்க அனுமதி வழங்கவேண்டும்” என கேட்டதும், அவரது காணொளிகளில் வெளியாகி உள்ளது.
இதற்குடன், ஜோதியின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பயண வரலாறுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது மடிக்கணினியும் தற்போதைய தடயவியல் பரிசோதனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதையடுத்து, 2023ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தில் விசா பெறுவதற்காக சென்றபோது, அங்குள்ள அதிகாரி எஹ்சான்-உர்-ரகுமுடன் (டேனிஷூடன்) அவர் தொடர்பு கொண்டு பழகியிருந்தது தெரியவந்துள்ளதாக NIA தெரிவித்துள்ளது.