திருவாரூரில் விஜய் பரப்புரைக்கு 26நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி
வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதையடுத்து தவெக சார்பில் காவல்துறையிடம் மனு அளித்த நிலையில், திருவாரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்,
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும், காலை 9 மணிக்குள் கட்சியினர் பரப்புரை நடக்கும் இடத்திற்கு வர வேண்டும், ரோட் ஷோ நடத்தக்கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, கமலாலய குளக்கரை மற்றும் ஓடம்போக்கி ஆற்றுப் பாலத்தில் தடுப்பு அரன்களை தமிழக வெற்றி கழகத்தினரே அமைக்க வேண்டும்,
போலீசாரின் நிபந்தனைகள் மீறப்படும் நிலையில் பரப்புரையை பாதியிலேயே நிறுத்த காவல்துறையினருக்கு அனுமதி உண்டு உள்ளிட்ட 26 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
