தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. மாநாடு தொடர்பாக காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது காவல்துறை சார்பில் 42 கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கம் கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையின் 42 கேள்விகளுக்கும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையிடம் விளக்கம் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும் காவல்துறை தற்போது வரை அனுமதி கொடுக்காததால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று திருமங்கலம் ஏ எஸ் பி அன்சுல் நாகரை சந்தித்து மாநாடு அனுமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து கைகளுக்கும் உரிய விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பாக பார்க்கிங் வசதி போக்குவரத்து வசதி உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளதாகவும் மாநாட்டு பணிகள் 70% நிறைவு பெற்றுள்ளதாகவும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் பேட்டி